இந்திய –- தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று டர்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–-2 என்ற கணக்கில் இழந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
முதல் 2 டெஸ்ட்களில் மோசமாக ஆடித் தோற்ற இந்திய அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இந்தியாவுக்கு சற்று சவாலானதே.6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றால் இந்திய அணி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.
டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் தென்னாபிரிக்கா இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.
தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை. டிவில்லியர்ஸ் இல்லாததை இந்தியா சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM