சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியம்!

Published By: Devika

30 Jan, 2018 | 07:35 PM
image

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் முகாமில், நபரொருவர் தனது அயல் வீட்டுச் சிறுமியை வீட்டினுள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்.

இதைக் கண்ட அரச சார்பற்ற நிறுவன ஊழியர் ஒருவர், சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

தாயார் அளித்த புகாரின் பேரில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று (29) வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு அபராதமாக இரண்டு இலட்ச ரூபா செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50