யேமனிலுள்ள சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Shabwa மாகாணத்திலுள்ள சோதனைச் சாவடி மீதே இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடி மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திய தாக்குதல்தாரிகள், காரால் மோதி தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும் அப் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல், யேமனில் ஹெளதி போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு மனிதாபிமான நிலைவரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யேமனின் தென் துறைமுக நகரான ஏடனில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு உடனடி யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நேற்று அழைப்பு விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM