கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன ?

Published By: Priyatharshan

30 Jan, 2018 | 01:37 PM
image

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

கூட்டத்திற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் வேளையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது நிறைவடைந்துள்ளது.

சபை முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை நடத்த முடியாதென தெரிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை வைக்குமாறு தெரிவித்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் வேண்டுதல்களுக்கு தலைசாய்த்தவாறு கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.

இதையடுத்து, சபாநாயகர் கருஜயசூரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் விவாதம் தொடர்பான திகதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமென தேர்தல் ஆணைக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:34:52
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02