சிறுமி அமானி ராயிதாவின் வேண்டுகோளை ஏற்று அவரது பதுளை இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்…!

Published By: Robert

29 Jan, 2018 | 04:33 PM
image

ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.  எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கக் கிடைக்குமென்று அச்சிறுமியோ சிறுமியின் பெற்றோரோ சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை. 

ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் சிறுமியொருவர் தன்னைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அறிந்து கொண்ட ஜனாதிபதி, தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி அச்சிறுமியை தன்னிடம் அழைத்து பேசி மகிழ்ந்தார். ஜனாதிபதியுடன் மகிழ்ச்சியாக உரையாடிய அச்சிறுமி தனது கைகளினால் வரைந்த சித்திரமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். வர முன்பதாக தொலைபேசியின் மூலம் தனக்கு தெரியப்படுத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் செல்லமாக கேட்டுக்கொண்டார். 

ஜனாதிபதி நேற்றைய தினம் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்குபற்றியதன் பின்னர் தனது வேலைப்பளுவின் மத்தியிலும் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அச்சிறுமியின் வீட்டுக்குச் செல்ல மறந்துவிடவில்லை.

 தனது நண்பர் நண்பிகளுடன் ஜனாதிபதியின் வருகையை எதிர்பார்த்திருந்த அமானி ராயிதா என்ற அச்சிறுமி தனது வீட்டுக்கு வந்த ஜனாதிபதியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

ஜனாதிபதி சிறுமி ராயிதா பாடிய பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்ததுடன், சிறுவர் சிறுமியர்களுடன் சேர்ந்து பாடலொன்றையும் பாடி மகிழ்ந்தார். ஜனாதிபதி விடைபெற்றுச் செல்லும் வேளையில் கொழும்புக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னைப் பார்க்க வருமாறு அச்சிறுவர்களுக்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22