இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் டி கொக், அம்லா ஆகியோரின் மிரட்டல் சதத்துடன் இமாலய இலக்கை எட்டிய தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களுக்கு 318 ஓட்டங்கள் எடுத்தது. ஜோ ரூட் அதிரடியாக விளையாடி 113 பந்துகளில் 125 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். ஹோல்ஸ் (65), ஸ்டோக்ஸ் (53) அரைசதம் அடித்தனர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு தொடக்க வீரர்கள் டி கொக், அம்லா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
நிதானமாக ஆடிய இருவரும் சதம் விளாசி மிரட்டினர். டி கொக் 117 பந்துகளில் 135 ஓட்டங்களும் (16 பவுண்டரி, 4 சிக்சர்), அம்லா 130 பந்துகளில் 127 ஓட்டங்களும் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். டுபிளசி தன் பங்கிற்கு 33 ஓட்டங்கள் குவிக்க 46.2 ஓவர்களில் தென்ஆபிரிக்கா 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 319 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. டி கொக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM