வவுனியா - இராசேந்திரன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வேப்பங்குற்றிகளை நெளுக்குளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அவரது தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இராசேந்திரன்குளம் பகுதியிலிருந்து பொன்னாவரசன்குளம் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் 12வேப்பம் மரக்குற்றிகளை கொண்டு சென்றபோது அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் வாகனத்தின் சாரதி 41 வயதான மாரிமுத்து சந்திரபாலன் என்பவரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM