வாரியபொல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நான்கு பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகொடஹென மலகனெ தம்பரவ பிரதேசத்தில்வை வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்ட முற்பட்ட வேளையில் நான்கு பேர் வாரியபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாரியபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களை கைது செய்யும் வேளையில் இவர்களிடமிருந்து அளவாங்கு ஒன்றும், உளி இரண்டு, மண்வெட்டி ஒன்று, சுத்தியல் இரண்டு உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நிகவரெட்டிய, நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32,25,21 மற்றும் 30 வயதுடைய நபர்களே என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை இன்று வாரியாபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது வாரியாபொல நீதவான் நீதிபதி இவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியாபொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM