ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை கடந்த 26.01.2018 அன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வேளையில் படுகொலைச் சந்தேக நபர்களில் ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான ஏனைய ஐவரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐவரும் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகின்றனர் என்பதுடன் நீதிபதியின் உத்தரவின் பேரில் இவ்விசாரணை கடந்த டிசெம்பெர் மாதம் முதல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த 2016 செப்டம்பர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் ஐவர் பிணையில் வெளியே வந்துள்ளனர்.
ஆறாவது நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதும் அவர் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் தொடர்ந்தும் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM