அமெரிக்காவிலுள்ள 'குஹ்ஹெனீம்' என்ற அருங்காட்சியகத்தில் பிரபல ஓவியர் வான்கா வரைந்த ஓவியம் ஒன்று இருக்கிறது. இந்த ஓவியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தனி வீட்டில் வைக்க அனுமதிகேட்டிருக்கிறார். இதற்காக அவர் அருங்காட்சியகத்திற்கு கடிதமொன்றையும் எழுதி இருக்கிறார்.
ஆனால், அந்த அருங்காட்சியகம் அந்த ஓவியத்தை அவருக்கு விற்க மறுத்து இருக்கிறது. அதற்கு பதிலாக தங்கத்தால் ஆன கழிவறை ஒன்றை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அனுப்பி இருக்கிறது. அருங்காட்சியகத்தின் இந்தப்பதில் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏனென்றால்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது வான்கா வரைந்த ஓவியம் ஆகும். ''லேண்ட்ஸ்கேப் அண்ட் ஸ்னோ'' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஓவியம் 1888ல் வரையப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு பல கோடிகளை தாண்டும். பச்சை புல்வெளியில் மனிதரும், நாயும் நடந்து செல்வது போல இது இருக்கும். இந்த ஓவியத்தை கொடுக்க மறுப்புத் தெரிவித்தே அந்த அருங்காட்சியக நிர்வாகம் பதில் அனுப்பி இருக்கிறது.
அதில் ''இப்போது அந்த ஓவியத்தை விற்கும் எண்ணத்தில் இல்லை. அதற்கு பதிலாக உங்களுக்கு 'அமெரிக்கா' என்ற கழிவறை ஒன்றை தருகிறோம். இது தங்கத்தால் ஆனது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை சில காத்திற்கு முன்பு வரை அந்த அருங்காட்சியகம் பொதுத்தேவைக்காக வைத்திருந்தது. மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதற்கு அமெரிக்கா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கர்களின் வளத்தைக் குறிக்க இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 18 கரட் தங்கத்தாலானது குறித்த கழிவறை. மேலும் அருங்காட்சியகம், ''இதை உங்கள் வீட்டில் வந்து நாங்களே பொருத்தி தருகிறோம். எப்படி இதை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம். முக்கியமாக இதை நீங்கள் வாங்க முடியாது. சில மாத வாடகைக்கு மட்டுமே எடுக்கலாம்'' என்று அறிவித்துள்ளார்கள்'
இது அமெரிக்க ஜனாதிபதிக்கு நேர்ந்த பெரிய அவமானம் ஆகும். வேண்டும் என்றே ஜனாதிபதியை அந்த அருங்காட்சியக நிர்வாகம் அவமானப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM