2018 ஆம் ஆண்டின் முதல் தொடரை வெற்றிகொள்வது யார் என்ற போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் – சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஒவ்வொரு லீக் போட்டியிலும் எதிரணிகளை வீழ்த்தி சமபலத்துடன் திகழும் இலங்கையும் பங்களாதேஷும் மோதுகின்றன.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய அணி பங்களாதேஷ் தான். அதன்பிறகு இரண்டாவது இடத்தில் சிம்பாப்வே திகழ்ந்தது.
காரணம் இலங்கை அணி தான் விளையாடிய முதலிரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளிடம் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
அதன்பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இவ்விரு அணிகளுக்கும் பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை.
அதுவும் பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசிப் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி சாதனை படைத்தது இலங்கை.
இந்நிலையில் இந்தத் தொடரின் இறு திப் போட்டி இன்று பங்களாதேஷில் முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் இருவர் சாதனை படைக்கக் காத்திருக்கின்றனர்.
அதில் அண்மைக்காலமாக சிறந்த சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் திஸர பெரேராவுக்கு 150 விக்கெட்டுக்களை பெற இன்னும் ஒரே ஒரு விக்கெட்தான் தேவை.
அதேபோல் இலங்கை அணியின் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும் ஒரு மைல்கல்லை இன்றைய போட்டியின் மூலம் எட்டவுள்ளார்.
அவர் தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்த இன்னும் அவருக்கு இரண்டு விக்கெட்டுக்கள்தான் தேவையாக உள்ளன.
இன்றைய போட்டியின் மூலம் இந்த இருவரும் தங்களது விக்கெட் சாதனையை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் ஹத்துருசிங்கவின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சற்று முன்னேறியிருக்கிறது என்றே சொல்லலாம்.
முதலிரண்டு போட்டிகளிலும் திணறினாலும் மற்றைய இரண்டு போட்டிகளிலும் நம்பிக்கையுடன் ஆடி வெற்றிகளைக் குவித்தது இலங்கை.
மறுமுனையில் பங்களாதேஷ்அணியும் சமபலத்துடனேயே திகழ்கிறது. அதுவும் அவர்களின் சொந்த மைதானம் என்ப தால் இன்னும் சிறப்பாகவே தயாராகியிருப்பார்கள்.
அதனால் இன்றைய போட்டியை இரண்டு அணிகளும் தங்களது ஆண்டின் முதல் வெற்றி யை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடும் என்பது நிச்சயம்.
இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM