ஆளும் கட்சி என்ற வகையில் அதிகாரம் எம்மிடமே உள்ளது. ஆகவே கிராமத்தின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதே ஏற்றமானது. ஆகவே, அதிகாரத்தை எமக்கு வழங்க வேண்டும் .அதன் போது நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நாம் ஏற்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலை முதல் பதுளை வரையான நகரங்களின் அபிவிருத்திக்கு நாம் விசேட திட்டங்களை வகுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பதுளை நகரில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் ,
கடன் செலுத்திக் கொண்டு அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயந்தார். இதனையடுத்து ஊவா மாகாண சபை தேர்தலின் முடிவினை கண்டவுடன் அவர் மேலும் அச்சம் கொள்ள தொடங்கினார். இதன்போதே தேர்தலை நடத்தினார். இந்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றோம் .ஆகையால் ஊவா மக்களை நாம் என்றும் மறக்க மாட்டோம் . மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நாட்டுக்கு செய்தவற்றை புரிந்து கொண்டு நாம் ஆட்சியை பொறுப்பேற்றோம் .
முன்னைய ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்ட வீதி அபிவிருத்திகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ கடனுக்கு மேல் கடன் பெற்றார் .அந்த கடன்தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் ஆட்சி அதிகாரத்தை அவருக்கு கைவிட நேர்ந்தது .எனினும் அந்த கடனை செலுத்துவதற்கு போதியளவு நிதி நாட்டில் இருக்கவில்லை. இதன்போது நாட்டின் வருமானத்தை அதிகரித்து செலவினை குறைத்து கடன் பெறுவதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் . இதன்படி 2016 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் கடன் செலுத்தும் பலத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டோம் . இதன்படி புதிய பொருளாதார கொள்கையை நாம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். இந்த கொள்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது . இந்த வேலைத்திட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்வதற்கான பலம் எமக்கு கிடைத்துள்ளது.
வருமானம் இல்லையென்றால் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது . இதன்படி இரு வருடத்தில் நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்பினோம். இதன்படி பதுளை, பண்டாரவளை ,மொனராகலை , வெல்லவாய ஆகிய நகரங்களின் அபிவிருத்திக்கு எம்மிடம் விசேட திட்டம் உள்ளது .அம்பாந்தோட்டை அபிவிருத்தி முன்னேற்றத்தை மொனராகலை முதல் பதுளை வரை விரிவுபடுத்துவோம் . பல்வேறு வகையான தொழிற்சாலைகளை நிறுவி தொழில் வாய்ப்புகளை நாம் தோற்றுவிப்போம் .
நாம் கல்வி தகைமைக்கு ஏற்ற தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் . இளைஞர்களுக்கு தொழில்வாய்பப்களை ஏற்படுத்த ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் .
அத்துடன் முன்னைய ஆட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க 1.3 பில்லயின் டொலர் செலவிடப்பட்டது. இதற்காக கடன் பெறப்பட்டது .எனினும் தற்போது அதனை மாற்றி குத்தகை அடிப்படையில் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளோம் . தற்போது ஒரளவு கடன் சுமையை நாம் குறைத்துள்ளோம்.
எல்ல பகுதியை மையமாக வைத்து பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்கவுள்ளோம் . எனவே நாட்டின் அபிவிருத்திக்கு முன்னெடுத்து செல்வதற்கு கிராமத்தின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டும் . ஆளும் கடசி என்ற வகையில் அதிகாரம் எம்மிடமே உள்ளது .ஆகவே கிராமத்தின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதே ஏற்றமானது. ஆகவே அதிகாரத்தை எமக்கு வழங்க வேண்டும் . அதன் போது நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நாம் ஏற்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM