ஐ.தே.க.விடம் அதிகாரம் இருப்பதால் கிராமங்களை எங்களிடம் தாருங்கள்

Published By: Priyatharshan

27 Jan, 2018 | 09:01 AM
image

ஆளும் கட்சி என்ற வகையில் அதி­காரம்  எம்­மி­டமே  உள்­ளது. ஆகவே கிரா­மத்தின்  ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கு­வதே  ஏற்­ற­மா­னது. ஆகவே, அதி­கா­ரத்தை  எமக்கு  வழங்க வேண்டும்  .அதன் போது நாட்டை கட்­டி­யெ­ழுப்பும்  பொறுப்பை  நாம் ஏற்போம்  என பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்க  தெரி­வித்தார்.

‍மொன­ரா­கலை  முதல் பதுளை வரை­யான  நக­ரங்­களின்  அபி­வி­ருத்­திக்கு  நாம் விசேட திட்­டங்­களை வகுத்­துள்ளோம்  என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பதுளை நகரில் நேற்று நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில்  கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு  தெரி­வித்தார்.

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில் ,

கடன் செலுத்திக் கொண்டு  அர­சாங்­கத்தை  முன்‍­னுக்கு கொண்டு செல்­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ பயந்தார். இத­னை­ய­டுத்து ஊவா மாகாண சபை தேர்­தலின் முடி­வினை கண்­ட­வுடன் அவர் மேலும் அச்சம் கொள்ள தொடங்­கினார்.  இதன்­போதே  தேர்­தலை  நடத்­தினார்.  இந்த தேர்­தல்­களில்  நாம் வெற்றி பெற்றோம் .ஆகையால் ஊவா மக்­களை நாம் என்றும் மறக்க மாட்டோம் . மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் போது நாட்­டுக்கு  செய்­த­வற்றை புரிந்து கொண்டு  நாம் ஆட்­சியை  பொறுப்­பேற்றோம் .

முன்­னைய ஆட்­சியின் போது நிர்­மா­ணிக்­கப்­பட்ட   வீதி அபி­வி­ருத்­தி­க­ளுக்கு  மஹிந்த ராஜ­பக்ஷ  கட­னுக்கு மேல் கடன் பெற்றார் .அந்த கடன்­தொ­கையை  செலுத்த முடி­யாத  கார­ணத்­தினால்  ஆட்சி அதி­கா­ரத்தை  அவ­ருக்கு கைவிட நேர்ந்­தது .எனினும்  அந்த கடனை செலுத்­து­வ­தற்கு  போதி­ய­ளவு  நிதி நாட்டில் இருக்­க­வில்லை. இதன்­போது நாட்டின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து  செல­வினை குறைத்து கடன் பெறு­வ­தனை கட்­டுப்­பாட்­டுக்குள்  கொண்டு வந்தோம் . இதன்­படி 2016 முதல் 2017 ஆம் ஆண்­டு­களில் கடன் செலுத்தும் பலத்தை நாம் ஏற்­ப­டுத்திக் கொண்டோம் . இதன்­படி  புதிய பொரு­ளா­தார கொள்­கையை    நாம் நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தினோம்.  இந்த கொள்­கைக்கு  சர்­வ­தேச  நாணய நிதியம்  ஒப்­புக்­கொண்­டது . இந்த வேலைத்­திட்­டத்தை  முன்­னுக்கு கொண்டு செல்­வ­தற்­கான பலம் எமக்கு  கிடைத்­துள்­ளது.

வரு­மானம்  இல்­லை­யென்றால் நாட்டின் அபி­வி­ருத்­தியை  முன்­னெ­டுக்க  முடி­யாது . இதன்­படி இரு வரு­டத்தில் நாட்டின் அபி­வி­ருத்­தியை  கட்­டி­யெ­ழுப்­பினோம். இதன்­படி பதுளை, பண்­டா­ர­வளை ,மொன­ரா­கலை , வெல்­ல­வாய ஆகிய நக­ரங்­களின் அபி­வி­ருத்­திக்கு  எம்­மிடம்  விசேட திட்டம்  உள்­ளது .அம்­பாந்­தோட்டை  அபி­வி­ருத்தி  முன்­னேற்­றத்தை மொன­ரா­கலை  முதல் பதுளை வரை விரி­வு­ப­டுத்­துவோம் . பல்­வேறு வகை­யான  தொழிற்­சா­லை­களை  நிறுவி தொழில் வாய்ப்­பு­களை  நாம் தோற்­று­விப்போம் .

நாம்  கல்வி தகை­மைக்கு  ஏற்ற தொழில்­வாய்ப்­பு­களை  ஏற்­ப­டுத்த   திட்­ட­மிட்­டுள்ளோம் .  இளை­ஞர்­க­ளுக்கு  தொழில்­வாய்­பப்­களை  ஏற்­ப­டுத்த ஹோட்டல் மற்றும் தொழிற்­சா­லை­களை  உரு­வாக்க வேண்டும் .

அத்­துடன் முன்­னைய ஆட்­சியின்  போது அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை நிர்­மா­ணிக்க 1.3 பில்­லயின் டொலர்  செல­வி­டப்­பட்­டது.   இதற்­காக கடன் பெறப்­பட்­டது .எனினும் தற்­போது அதனை மாற்றி குத்­தகை  அடிப்­ப­டையில்  துறை­மு­கத்தை  சீனா­வுக்கு  வழங்­கி­யுள்ளோம் . தற்­போது ஒர­ளவு கடன் சுமையை நாம் குறைத்­துள்ளோம்.

எல்ல பகு­தியை மைய­மாக  வைத்து பாரிய சுற்­றுலா வல­ய­மொன்றை  உரு­வாக்­க­வுள்ளோம் . எனவே நாட்டின் அபி­வி­ருத்­திக்கு  முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு  கிரா­மத்தின்  அதி­கா­ரத்தை  ஐக்­கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டும் . ஆளும் கடசி என்ற வகையில் அதிகாரம்  எம்மிடமே  உள்ளது .ஆகவே  கிராமத்தின்  ஆட்சியை  ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதே  ஏற்றமானது. ஆகவே அதிகாரத்தை  எமக்கு வழங்க வேண்டும் . அதன் போது நாட்டை கட்டியெழுப்பும்  பொறுப்பை  நாம் ஏற்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04