தாய்லாந்திலுள்ள Khon Kaen விமான நிலையத்தில் இன்று தீ பரவியுள்ளதன் காரணமாக, அவ்விமான நிலையமூடான விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் திசை திருப்பப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் இன்று தீ பரவியுள்ளதைத் தொடர்ந்து, அவ்விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து, மேற்படி விமான நிலையமூடான அனைத்து விமானப் போக்குவரத்துகளும் உடொன் (Udon ) விமான நிலையத்துக்குத் திசை திருப்பப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, Khon Kaen விமான நிலையத்திலிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விமான நிலையத்தின் 3ஆம் மாடியில் தீ பரவ ஆரம்பித்ததாகவும், தீயணைப்புப் படை வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்படி விமான நிலையத்தில் ஏற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக தீ பரவியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM