சிம்பாப்பேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என நாட்டின் புதிய ஜனாதிபதி எமர்சன் மனங்காகுவா அறிவித்துள்ளார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ரொபர்ட் முகாபே மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
சிம்பாப்பேயின் புதிய ஜனாதிபதி எமர்சன் மனங்காகுவாவின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பாப்பேயில் 37 ஆண்டுகால ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபேயின் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் இதுவரையான ஜனாதிபதி தேர்தலில் முறைகேடாகவே அவர் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாறிருக்க அவருடைய பதவிக்காலம் நிறைவடையும் தறுவாயில், புதிய தேர்தலில் மனைவியை வேட்பாளராக நிறுத்தி ஆட்சியை கைப்பற்ற ரொபர்ட் முகாமே முயற்சித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் சிம்பாப்பே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிம்பாப்பேயில் இராணுவப் புரட்சி வெடித்தது. இதன்போது கைது செய்யப்பட்ட ரொபர்ட் முகாபேயும், அவருடைய குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM