மட்டக்களப்பு - ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்ததுடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பொலிஸார், ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சந்தேக நபரை பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்கும் சிறுவனான மாணவன், இம்மாதம் 13ஆம் திகதி குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM