ரஷ்யாவானது இந்த வருடத்தில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளையொட்டி கட்டாக்காலி நாய்களை வகை தொகையின்றி கொல்லத் திட்டமிட்டுள்ளதாக மிருக உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேற்படி உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறும் நகர்களில் நாய்களைக் கொல்வதற்கான கே.ஜி.பி. உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக சுமார் 1.4 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர மிருக பாதுகாப்பு மன்றத்தின் பணிப்பாளரான டமிதெரினா தமித்திறைவா கூறினார்.
உலகக்கிண்ண காற்பந்தாட்ட ஏற்பாட்டாளர்கள் மேற்படி மிருக படுகொலைகள் தொடர்பில் குருடர்கள் போன்று இருந்து ரஷ்ய அரசாங்கத்திற்கு எதுவித அழுத்தமும் கொடுக்காதுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த மன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான நாய்களும் பூனைகளும் பறவைகளும் கொடூரமான நஞ்சூட்டி கொல்லப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ள 11 நகர்களில் நாதியற்ற மிருகங்களின் குருதி பாயவுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய பிரதிப் பிரதமரும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முன்னாள் விளையாட்டு அமைச்சருமான விதாலி மக்தோ, உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் நகர்களிலுள்ள சுமார் 2 மில்லியன் கட்டாக்காலி நாய்களை அடைப்பதற்காக தற்காலிக நிலையங்களை ஸ்தாபிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
இந்நிலையில் டமிதெரினா தமித்திறைவா தெரிவிக்கையில், நாய்களுக்கான நிலையங்களை ஸ்தாபிப்பதை விடுத்து 'நாய்கள் கே.ஜி.பி. மரணதண்டனைப் நிறைவேற்றப்படை' என அழைக்கப்படும் விசேட ஆயுதப்படையினருக்கு நாய்களைக் கொல்வதற்கு ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு பணம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்தப் பணமானது நாய்களைப் பாதுகாத்துப் பேணுவதற்குப் பதிலாக அவற்றை படுகொலை செய்து நிரந்தரமாக மௌனமாக்கப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதன் பிரகாரம் அந்த உலகக் கிண்ண விளையாட்டப் போட்டி இடம்பெறும் நகர்களில் ஒன்றான எகடெரின்பேர்க்கிற்கு மட்டும் இந்தப் படுகொலைகளுக்காக 407,000 ஸ்ரேலிங் பவுண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித் தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM