மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்பதை ஆராய மீண்டும் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் பாரளுமன்றத்தில் கூடுகின்றது. அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை இன்னும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்த விவாதம் எப்போது நடத்தப்படுவது என்ற உறுதியான திகதியொன்றை தீர்மானிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடும் இந்தக் கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விவாதிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் சில பக்கங்களை காணவில்லை எனவும், உண்மைகள் மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிணைமுறி அறிக்கையினை இறுவட்டில் பதிவேற்றி அதன் மூலமாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தெரிவிக்கப்படும் என்பது அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM