ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சபையில் சமர்ப்­பிப்பு.!

Published By: Robert

24 Jan, 2018 | 09:03 AM
image

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­மு­றிகள் கொடுக்கல், வாங்கல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல்­மோ­ச­டிகள் சம்­பந்­த­மான 34தொகு­திகள் அடங்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை ஆகி­யன சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில்

 வாக்­கு­வாதம் எழுந்­த­தை­ய­டுத்து இன்று பிற்­பகல் 2.30 இற்கு நடை­பெறும் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் விவாதம் குறித்த தினம் குறித்து ஆராய்ந்து முடி­வெ­டுக்க முடியும் என்று சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பிற்­பகல் ஒரு­ம­ணிக்கு ஆரம்­ப­மா­னது. சபா­நா­யகர் அறி­விப்­பினை அடுத்து சபா­நா­ய­க­ரி­டத்தில் கடந்த 17ஆம் திகதி ஜனா­தி­பதி செய­லகம் மூலம் கைய­ளிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் இரண்டு அறிக்­கை­களும் சபையில் சபை­மு­தல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­லவால் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. 

அத­னை­ய­டுத்து அமைச்சின் அறிக்­கைகள் சமர்ப்­பிப்பு, வாய்­மூ­ல­வி­னா­வுக்­கான கேள்வி நேரம், நிலை­யி­யற்­கட்­டளை 23இன் கீழ் இரண்டின் கீழான உரை ஆகி­ய­வற்­றினை அடுத்து எழுந்த எதிர்க்­கட்சிப் பிர­த­ம­கொ­ர­டாவும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி, 

 இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­மு­றிகள் கொடுக்கல் வாங்கல் சம்­பந்­த­மான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோச­டிகள் சம்­பந்­த­மான 34தொகு­திகள் அடங்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை ஆகி­யன சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தோடு உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக சபா­நா­ய­க­ருக்கும், சாபா­நா­யகர் அலு­வ­ல­கத்­திற்கும் நன்றி கூறு­கின்றோம். 

பிணை­மு­றிகள் சம்­பந்­த­மான அறிக்­கையில், பிர­த­மரின் தலை­யீ­டுகள், அர­சாங்க ஊழி­யர்கள் சட்­டத்­தினை மீறும் செயற்­பா­டுகள் இலங்கை மத்­திய வங்கி ஆளு­நரின் தலை­யீ­டுகள் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் ஊழியர் சேம­லா­ப­நி­தியில் 850கோடி ரூபா­விற்கும் அதி­க­மான தொகைக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தியும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

ஊழியர் சேம­லா­ப­நி­தி­யா­னது சாதா­ரண ஊழி­யர்கள் பண­மாகும். அவர்கள் சேவை­யி­லி­ருந்து வில­கும்­போது அடுத்த காலத்­தினை கழிப்­ப­தற்­கான சேமித்த தொகை­யாகும். அதி­லேயே இத்­த­கைய மோசடி இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. பிணை­மு­றிகள் மோச­டி­யா­னது சாதா­ரண மக்­களின் பணத்­தினை மேல்­தட்டு வர்க்­கத்­தினர் தமது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி எவ்­வாறு திரு­டு­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

சாதா­ர­ண­மாக கடை­களில், வீடு­களில் பொருட்கள் பணங்கள் திரு­டப்­ப­டு­வ­தையே நாம் திருட்டு என்று அர்த்­தப்­ப­டுத்தி அறிந்­தி­ருக்­கின்றோம். ஆனால் இங்கு சாதா­ரண மக்­களின் பணத்­தனை மிகவும் சூட்­சு­ம­மாக தமது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி தந்­தி­ர­மாக திரு­டி­ய­மையை இந்த அறிக்கை தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

அதற்­க­மை­வாக நாம் இந்த பாரிய மோச­டி­கு­றித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற வலி­யு­றுத்­து­கின்றோம். இருப்­பினும் சட்­டமா அதிபர் திணைக்­களம், நீதி­மன்றச் செயற்­பாடு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு ஆகி­ய­ன­வற்றின் ஊடா­கவே குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும். இந்த நிறு­வ­னங்கள் அனைத்தும் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு அல்­லது அர­சி­யல்­வா­தி­களின் அதி­கா­ரங்­க­ளுக்குள் இருப்­ப­தானால் இவற்­றினால் நியா­ய­மான நட­வ­டிக்­கை­களை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக எடுக்க முடியும் என்று நாம் கரு­த­வில்லை.  

அந்த நிறு­வ­னங்­க­ளி­டத்தில் நியா­ய­மான நட­வ­டிக்­கையை எதிர்­பார்ப்­ப­தென்­பது திரு­டனின் அம்­மா­விடம் மைவெ­ளிச்சம் பார்ப்­பது போன்­ற­தா­கவே அமையும்.  வழக்கும் பௌத்­த­தே­ரரின் உடை­யது. பொருளும் பௌத்த தேரரின் உடை­யது என்று நாம் உதா­ர­ணத்­தினை கூறு­வ­துண்டு. தற்­போது தான் அதனை பார்க்­க­மு­டி­கின்­றது.  

இதே­வேளை பாரிய ஊழல்­மோ­ச­டிகள் சம்­பந்­த­மான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் 34தொகு­திகள் அடங்­கிய அறிக்கை கடந்த காலத்தில் இடம்­பெற்ற மோச­டிகள் சம்­பந்­த­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அது குறித்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பொது­மக்­களின் பணம் மிக­மோ­ச­மாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி, அவ­ரு­டைய அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி துஷ்­பி­ர­யோகம் செய்த முறைமை, வீட­மைப்பு அமைச்சில், அவன்காட் நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற மோச­டிகள், தேர்தல் காலத்தில் அரச வளங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்ட முறை போன்ற வியங்கள் எல்லாம் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்றார்.

இச்­ச­ம­யத்தில் எழுந்த சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, சபா­நா­ய­கரே, அநுர எம்.பி கூறு­வது போன்று எந்­த­வி­ட­யங்­களும் இல்லை. அவர் திசை­தி­ருப்பும் வடிவில் விசா­ரணை அறிக்கை குறித்த விட­யங்­களை முன்­வைக்­கின்றார். நாம் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்­கைகள் தொடர்பில் விவாதம் நடத்­து­வ­தற்கு தயா­ராவே உள்ளோம். நாம் அச்­சப்­ப­ட­வில்லை. அது குறித்து கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிப்போம் என்றார்.

இத­னை­ய­டுத்து தொடர்ந்த அநு­ர­கு­மார திஸ­நா­யக்க எம்.பி, கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் விசா­ரணை அறிக்­கைகள் சம்­பந்­த­மாக கருத்­துக்­களை சபையில் கூறு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மையப்­ப­டுத்­தியே நான் கருத்­துக்­களை முன்­வைத்தேன். சபை முதல்வர் குழப்­ப­ம­டை­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பொது­மக்கள் முன்னால் மோச­டிகள் குறித்து தெரி­விக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பிர­தம கொரடா அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க கூறு­கிறார். நான் பொது­மக்கள் மத்­தியில் அது குறித்து கூறு­வ­தற்கு தயா­ராக இருக்கும் அதே­நேரம் இந்த சபையில் திரு­டர்கள், மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு முன்னால் வைத்து அந்த விட­யங்­களை குறிப்­பி­டவே அதிகம் விரும்­பு­கின்றேன். ஆகவே இழுத்­த­டிப்­புக்­களைச் செய்­யாது உள்­ளு­ராட்சி தேர்­த­லுக்கு முன்­ன­தாக இந்த விசா­ரணை அறிக்­கைகள் குறித்து விவாதம் செய்­ய­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்றார்.

ஆத­னைத்­தொ­டர்ந்து எழுந்த சபை­மு­தல்­வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைகளத்திடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் அறிக்கை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். நாம் விவாதத்திற்கு அஞ்சவில்லை என்றார். 

இதனையடுத்து தலையீடு செய்த சபாநாயகர் கருஜெயசூரிய, நாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவோம். இந்த விடயத்தினை நீடித்து சென்று விவாதிக்கமுடியாது. கட்சித்தலைவர்கள் சிறு விளக்கத்தினையே அளிக்கமுடியும் என்றே தீர்மானம் எடுத்திருந்தோம் என்பதை நினைவு படுத்தவிரும்புகின்றேன். அதன் பிரகாரம் நளையதினம்(இன்று) கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03