(ஆர்.யசி)
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை. சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எமது சார்பில் இந்தக் காரணிகளை நாம் உறுதியாக முன்வைக்க முடியும். எமது நீதிமன்றம் மீதான சுயாதீனத்தை சுட்டிக்காட்டி உறுதியான விவாதத்தை முன்னெடுக்க முடியும். அதனை அரசாங்கமாக நாம் முன்னெடுப்போம். நேரடியாக எமது காரணிகளை நாம் தெரிவிப்போம். அத்துடன் இன்று நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நல்லிணக்க செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இவை அனைத்துமே எமக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM