கொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil) பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விசேட புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
குறித்த பவுஸரில் இருந்த உலை எண்ணெய் (Furnace Oil) இரசாயனப் பரிசோதனைக்கமைய தரமற்றவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் பவுசர் ஹோட்டலை நோக்கி செல்லும் வழியிலேயே உலை எண்ணெயில் (Furnace Oil) தரம் குறைந்த எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எண்ணெய் பவுஸர் செல்லவேண்டிய வழியில் செல்லாது வேறுவழியூடாக சென்று நீண்ட நேரம் ஒரு இடத்தில் தரித்து நின்றுள்ளதாகவும் விசேட புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
“எரிபொருள் கலப்படம் செய்து விற்பனை மேற்கொள்வது தொடர்பாக தெரியவந்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிப்பதுடன், 0728870624 மற்றும் 0777748417 தொடர்பை ஏற்படுத்தி மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM