பேஸ்புக் குழந்தை படத்தில் வேறு ஒருவர் பெயரை போட்டதால் மனைவிக்கு அடி உதை

Published By: Robert

10 Feb, 2016 | 01:45 PM
image

Embedded image permalink

மலேசியாவின் பினாங் நகரை சேர்ந்த பெண் ஸ்டெல்லா ஓய் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையின் படத்தை போட்டு அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என்று வேறு ஆண் நபர் ஒருவரின் பெயரை போட்டு உள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியை அடித்து உதைத்து உள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா குறித்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் தான் படுகாயமடைந்த பல படங்களை பதிவு செய்து உள்ளதுடன்,

Embedded image permalink

தற்போது தனது காயங்கள் குணமடைந்து வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் நானும் எனது கணவரும் இனி நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

டத்தோ லீ எனப்படுவது தனது பேஸ் புக் நண்பர் என ஸ்டெல்லா  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right