மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு உழவு இயந்திரங்கள் மணல் ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் கைப்பற்றப்பட்டதுடன் எட்டு சாரதிகளும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளிடம் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குழுவினர் முந்தன் குமாரவெளி ஆற்றிற்குள் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்ந்த சாரதிகளும் உழவு இயந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சாரதிகள் எட்டு பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதிகளை நாளை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM