கொழும்பு நகரின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்று தந்தால் மேயராக இருந்து கொழும்பு நகரை பசுமைமிக்க ஸ்மார்ட் நகரமாக மாற்றியமைப்பேன் என கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் ரோஸி சேனநாயக்க தெரிவித்தார்.
நாம் மாநகர சபையின் ஆட்சியை பெற்றவுடன் வெள்ளத்தில் மூழ்காத நகரமாக கொழும்பு மாநகர சபையை மாற்றியமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெமட்டகொடை – குப்பியாவத்தையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பு நகரிலுள்ள உட்கட்டமைப்பு, வீதி பிரச்சினை, வீடமைப்பு பிரச்சினை ஆகியவற்றுக்கு உரிய தீர்வினை நாம் பெற்றுத் தருவோம். கொழும்பு நகரில் மேலும் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்போம்.
தற்போது ெவள்ளத்தினால் கொழும்பு நகரம் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போதைக்கு பல தடவை ெவள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் நாம் மாநகர சபையின் ஆட்சியை பெற்றவுடன் ெவள்ளத்தில் மூழ்காத நகரமாக கொழும்பு மாநகர சபையை மாற்றியமைப்போம்.
மேலும் கொழும்பு மாநகர சபையில் காணப்படும் குப்பை பிரச்சினைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைக்கு தீர்வு வழங்கியுள்ளார். இதன்படி புத்தளத்தில் குப்பை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் மாநகர சபை என்ற வகையில் குப்பை பெற்றுக்கொள்ளும் நேரத்தை முகாமைத்துவம் செய்வோம்.
அத்துடன் தற்போது வரிப்பணம் செலுத்தும் போது சேவையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது. இதனை இல்லாமல் செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம். கொழும்பு நகரின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்று தந்தால் மேயராக இருந்து கொழும்பு நகரை பசுமையான ஸ்மார்ட்நகரமாக மாற்றியமைப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM