அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 18ஆம் திகதி விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்துக்கு கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் எந்த அத்தியாவசிய பொருட்களினதும் வரி அதிகரிக்கப்படவில்லை. மாறாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாசி, செத்தல் மிளகாய் உட்பட பலசரக்கு பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை செயற்படுத்தும் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எந்தவித அத்தியாவசிய பொருட்களுக்கும் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் எதிர்வரும் 6மாதங்களுக்கு தற்போது அமுலில் இருக்கும் விலைக்கே குறித்த பொட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம். அதனால் அத்தியாவசிய பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரசாரங்களில் எந்த உண்மையும் இல்லை. மக்கள் பொய் பிரசாரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM