அறிக்­கையில் 103 பக்­கங்கள் மாயமாம்

Published By: Robert

23 Jan, 2018 | 10:44 AM
image

பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 103 பக்­கங்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜி.எல் பீரிஸ் தெரி­வித்தார்.

Image result for ஜி.எல் பீரிஸ் virakesari

அத்­துடன் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்கும் முன்னர் திரு­டர்­களின் கைக­ளுக்கு ஒப்­ப­டைத்­துள்­ளனர்.  அவ்­வா­றாயின் எப்­படி நீதி­யான விசா­ர­ணையை எதிர்­பார்க்க முடியும். மேலும் இந்த விசா­ரணை  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் குற்­ற­வியல் பிரி­விற்கு வழங்­கப்­ப­டாமல் சிவில் வழக்கு பிரி­விற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

இலங்கை மத்­திய வங்­கியில் பாரி­ய­ளவில் மோசடி நடந்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் இந்த மோச­டியின் பிர­தான குற்­ற­வா­ளி­க­ளான மத்­திய வங்­கியின்  முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்­திரன், முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் பெபச்­சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோ­சியஸ் ஆகி­யோ­ருக்கு   அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இது எந்த வகையில் நியா­ய­மாகும்? இந்த அர­சாங்கம் யாரை காப்­பாற்ற முயற்­சிக்­கின்­றது? இவ்­வாறு அறிக்­கையை திரு­டர்­களின் கைகளில் ஒப்­ப­டைக்கும் போது எப்­படி நீதியை எதிர்­பார்ப்­பது? அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கையில் 103 பக்­கங்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. மேலும் சில இணை ஆவ­ணங்­களும் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன. இது எமக்கு பாரிய சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திரு­டர்­களை பாது­காக்க முனை­கின்றார் போல் தெரி­கின்­றது.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விசா­ரணை  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் குற்­ற­வியல் பிரி­விற்கு வழங்­கப்­ப­டாமல் சிவில் வழக்கு பிரி­விற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள். அதற்கு மாறாக சிவில் வழக்கின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட நிதியையே அறிவிட திட்டமிட்டுள்ளனர். இது நியாயமற்ற செயற்படாகும். ஜனாதிபதி ஆக்ரோஷமாக கூறிய வாள் எங்கே?. திருடர்களை கைது செய்யாமல் விடுவதானது சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08