பிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி

Published By: Robert

23 Jan, 2018 | 09:35 AM
image

மத்­திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி ­ராக சட்ட ரீதியில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட் டில் பிரதமர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும்.  மாறாக  பிர­த மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்­சி­ யினர் என்னை பல­வீ­னப்­ப­டுத்தி ஊழல்வாதி­களை காப்­பாற்ற முயற்­சிக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா ரக் கூட்டம் நேற்று கண்­டியில் இடம்­பெற்­றது, இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி ­ய­போதே  ஜனா­தி­பதி  மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில் 

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள்    மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்­துள்ள அறிக்­கைக்கு அமை­வாக அனை­வ­ருக்கும் எதி­ராக சட்­டத்தை நடை­முறை படுத்தி அவர்­க­ளுக்கு தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க  எனக்கு ஒத்­து­ழைப்பு தாருங்கள். 

  பிர­தமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்­சி­யினர் அனை­வரும் ஒரே நோக்­கத்தில் செயற்­ப­டு­வீர்கள் என்றால் இந்த பய­ணத்தில் என்னை பலப்­ப­டுத்­துங்கள்.  என்னை  பலப்­ப­டுத்­து­வதை விடுத்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் என்னை  பல­வீ­னப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும்  எடுக்க வேண்டாம் . 

2014 ஆம் ஆண்டு நான்  அப்­போ­தைய அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்­மீது குற்றம் சுமத்­தி­னார்கள்.  இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் என்­மீது  குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.  

நான் எந்தக் கட்­சிக்கும் துரோகம் இழைக்­க­வில்லை.  ஊழல் மோச­டிகள் அனைத்­தையும் ஒழிப்­ப­தற்கு  முன்­வ­ரு­கின்றேன். ஊழலை ஆத­ரிக்கும் அவ்­வா­றான நபர்­க­ளுக்கு மட்­டுமே நான் இன்று துரோ­கி­யாக உள்ளேன்.  இன்று மத்­திய வங்கி அறிக்கை தொடர்­பாக மேடை­களில் கூச்சல் போடும் முன்னாள் தலை­வர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா  பிரே­ரணை கொண்­டு­வந்த போது பாரா­ளு­மன்­றத்­திற்கு  வருகை தந்து  வாக்­க­ளிக்­க­வில்லை. 

ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய  மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17