மத்திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்வாதிகளுக்கு எதி ராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட் டில் பிரதமர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக பிரத மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி யினர் என்னை பலவீனப்படுத்தி ஊழல்வாதிகளை காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசா ரக் கூட்டம் நேற்று கண்டியில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றி யபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்துள்ள அறிக்கைக்கு அமைவாக அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறை படுத்தி அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
பிரதமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒரே நோக்கத்தில் செயற்படுவீர்கள் என்றால் இந்த பயணத்தில் என்னை பலப்படுத்துங்கள். என்னை பலப்படுத்துவதை விடுத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை பலவீனப்படுத்த வேண்டாம். அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் .
2014 ஆம் ஆண்டு நான் அப்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் என்மீது குற்றம் சுமத்தினார்கள். இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் என்மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நான் எந்தக் கட்சிக்கும் துரோகம் இழைக்கவில்லை. ஊழல் மோசடிகள் அனைத்தையும் ஒழிப்பதற்கு முன்வருகின்றேன். ஊழலை ஆதரிக்கும் அவ்வாறான நபர்களுக்கு மட்டுமே நான் இன்று துரோகியாக உள்ளேன். இன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சல் போடும் முன்னாள் தலைவர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த போது பாராளுமன்றத்திற்கு வருகை தந்து வாக்களிக்கவில்லை.
ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM