மத்திய வங்கி பிணை முறி அறிக்கையில் எந்த பக்கங்க ளும் மறைக்கப்படவில்லை. ஆணைக்குழு சரியாக தமது அறிக்கையை வழங்கியுள்ளதுடன் முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது.
ரவி கருணாநாயக எம்.பி விசேட உரை நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை. கள்ளர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் முக்கியஸ்தர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி அறிக்கையில் பக்கங்களை மறைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கையின் சகல பிரதிகளும் முழுமையாக பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் அறிக்கை பொய்யானது எனக் கூறவோ அல்லது மறைக்கப்பட்டதாக கூறவோ முடியாது. அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழு மிகச் சரியாக தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள், சாட்சியங்கள் என்பன அனைத்துமே மிகவும் முக்கியமானவையாகும். அவ்வாறு இருக்கையில் அறிக்கையினை முழுமையாக வாசிக்காத நபர்கள் மூலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக குறித்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்ட ரீதியில் சரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பாரளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக எதோ விசேட உரை நிகழ்த்தி இந்த விடயங்களை வெளிப்படுத்தவுள்ளதாக கூறுகின்றனர். அவர் கூறும் உரை என்னவென்பது எமக்கு தெரியாது. எவ்வாறு முன்வைத்தாலும் அதில் பிரயோசனமும் இல்லை. அவர் எதைக் கூறினாலும் அதனால் மக்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிகொள்ளப்போவதில்லை. உண்மையான கள்ளர்கள் யார் என்பது அனைவருக்குமே தெரியும். மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். ஆகவே மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM