(இரோஷா வேலு)
இலங்கை பொலிஸ் கீதம் பொலிஸ் மா அதிபரின் முன்னிலையில் தமிழ் மொழியில் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்டுள்ளது.
151 வருட இலங்கை பொலிஸ் வரலாற்றில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் திட்டத்தின் கீழ் பொலிஸ் கீதம் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
151 வருட வரலாற்றை கொண்ட இலங்கை பொலிஸ் திணைக்களம் தமக்கென ஓர் பொலிஸ் கீதத்தை அண்மையிலேயே இயற்றியுள்ளது.
அந்த வகையில் இந்த பொலிஸ் கீதமானது வடக்கு மற்றும் கிழக்கு பிதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் மனதைதொடும் வகையில் கந்தப்பு ஜெயந்தனால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் பொலிஸ் கீதம் தமிழ் இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனால் இசைக்கப்பட்டு, இதன் இருவெட்டு ஒன்றும் கடந்த 20 ஆம் திகதி வவுனியா பொலிஸ் கட்டடத்தொகுதியில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனுடன், அன்றையதினம் முல்லைத்தீவு புதிய பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியின் அடிகல் நாட்டும் நிகழ்வின் போது அக்கீதம் முதன்முறையாக இசைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் வன்னி பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பல்லின மக்கள் செறிந்து வாழும் இந்நாட்டில் இன, மத பாகுபடின்றி அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு சேவை வழங்கும் பொலிஸ் திணைக்களத்தில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் கீதம் தமிழில் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM