விரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை

Published By: Priyatharshan

22 Jan, 2018 | 07:51 PM
image

குற்றச்சாட்டு சுமத்தியவரே  குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குற்றச்சாட்டு சுமத்தியவரே  குற்றத்திற்கு பொறுப்பானவர் நாங்கள் எமது கொள்கைகள் கோட்பாடுகளுடன் எமது இலக்கை அடைய போராடி வருகின்றோம். தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோம்.

தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையிலும் சரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் சரி இவ்வாறான கேள்விகள் எழுவதில்லை. இதற்கு சொந்தக்காரர்கள் தான் இவ்வாறான கேள்விகளை கேட்டுள்ளார்கள்.

கொள்கைகள் தந்திரோபாயங்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் பல கோடிகள் மக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வழங்கியமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் பதிலளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான இ.ஜெயசேகரம், பா.கஜதீபன், பரஞ்சோதி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, மாநகர சபையின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58