பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத் திட்டத்தின் முதலாவது நாடாக இலங்கை திகழ்கின்றது.
அந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.
மொத்தம் 54 நாடுகளுக்கு பயணமாகவுள்ள பிபா கிண்ணமானது முதல் நாடாக இலங்கைக்குத்தான் எடுத்துவரப்படுகிறது. இலங்கை வரும் பிபா கிண்ணமானது நாளை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8 மணிமுதல் 2 மணிவரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பிறகு குறித்த கிண்ணமானது மாலைதீவுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.
இதன்படி, குறித்த வெற்றிக் கிண்ணத்தை உலகிற்கு அறிமுகம் செய்யும் சந்தர்ப்பம் முதற்தடவையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.
உலகில் உள்ள சுமார் 1.5 மில்லயன் மக்களுக்கு பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும் இந்த வாய்ப்பை முதல் முறையாக இலங்கை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 1,500 இலங்கையருக்கு நேரடியாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM