"செந்தில் தொண்டமானிடம் முறையிட்டிருந்தால் அன்றே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திருப்போம்"

Published By: Digital Desk 7

22 Jan, 2018 | 05:29 PM
image

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் மகளிர் பாடசாலை பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சும் வன்மையாக கண்டிப்பதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு எமது ஊடகவியலாரை சந்தித்த போது,

" நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக வாழலாம். ஆனால் நாம் யாரிடமும் மண்டியிட தேவையில்லை. யாரிடமும் எதையும் கெஞ்சி கேட்பதற்கும் தயாராக இல்லை. எமது உரிமைகளை நாம் தட்டிக் கேட்டே பெற்றிருக்கின்றோம்.

குறித்த பெண் அதிபர் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் முறையிட்டிருந்தால் அன்றே இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுத்திருப்போம். இருந்தாலும், பரவாயில்லை இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக நாங்களும் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளோம். ஏனென்றால்  ஒரு அதிபரை இழிவுப்படுத்தி வழி நடத்துகின்ற பொழுது அதிபர்களுக்கு சுதந்திரமாக செயலாற்ற முடியாது.

மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் தமிழ் பாடசாலைகளில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் அதிபர்களையும் முதலமைச்சருக்கு கீழ் அடிப்பணிய வைப்பதில்லை. தமிழ் கல்வி தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் முழு அதிகாரத்தையும் எங்களிடம் தந்துள்ளார்.

நாங்கள் எந்தவொரு அதிபர்களையும், கல்வி அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதில்லை. பாடசாலைகளை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு அவர்களுக்கு நாங்கள் முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளோம். எங்களது நோக்கம் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே " என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50