தனிமையில் விட்டில் வசித்து வந்த பெண்னொருவர் காயங்களுடன் யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆணைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 72 வயதான ஜெகநாதன் சத்தியபாமா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்த தெரிய வருவதாவது,
குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆயினும் மகன் தற்போது வன்னியில் வசித்து வருகின்றார்.
வீட்டில் தனிமையில் இருந்து வந்த குறித்த பெண்ணிற்கு அவரது உறவினர்கள் உணவுகளை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேர உணவை வழங்குவதற்காக வீட்டிற்குச் சென்ற போது குறித்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வயோதிப் பெண் உயிரிழந்துள்ளதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து சம்வம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த வயோதிப் பெண்ணின் காதில் மற்றும் கையில் இருந்த நகைகள் என்பன காணாமல் போயிருப்பதாகவும் மேலும் ஏதாவது காணாமல் போயிருக்கிறாதா? என்பது குறித்தும் தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் தலையில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வயோதிபப் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதால் அங்கு திருட்டுக்கள் இடம்பெற்றனவா? என்றும் திருட்டுக்காக கொலை செய்யப்பட்டிருக்கின்றாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM