இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே மீனவர்களின் குடும்பத்தினர் மனுகொடுத்துள்ளனர்.
காரைக்காலில் 'பாஸ்போர்ட்' (கடவுச்சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்விற்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்சித்தார். அப்போது திடீரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டனர்.
தீபாவளிக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது அவர்களை மீட்கவேண்டும். இதுபோன்ற கைது சம்பவம் இனி நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த 6 இளம் வயது மீனவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைவைத்துள்ளனர். அவர்களையும் விடுவிக்கவேண்டும் என கோரிக்கையுடன் கூடிய மனுவைக்கொடுத்து கதறி அழுதனர்.
நிகழ்ச்சியில் மீனவர்களை சந்தித்தது திட்டமிடாத வகையில் திடீரென ஏற்பட்டதால், அவர்களது அழுகுரலுக்கு நடுவில் பதில் எதுவும் கூறமுடியாமல் சற்று நேரம் அமைதிகாத்து நின்ற மத்திய அமைச்சர் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறிவிட்டு சென்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM