சடலங்களை தகனம் செய்வதால் வெளிப்படும் புகை மற்றும் தூசை தடுக்க அவற்றை –-200 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு உறைய வைத்து மாவாக்கும் புதிய முறைமையொன்றை நடைமுறைப்படுத்த பிரித்தானிய கென்ட் பிராந்தியத்திலுள்ள செவனோக்ஸ் மாவட்ட நகர சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது..
சடலங்களை அதி உறை குளிருக்கு உறைய வைத்து உலரச் செய்த பின்னர் மாவாக தூளாக்குவதால் சுற்றுச்சூழலில் புகையும் தூசும் சேர்வது தடுக்கப்படும் என சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அந்நாட்டு அரசாங்க அமைப்பான சட்ட ஆணையகம் தெரிவிக்கி றது.
இது தொடர்பான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய சட்ட வரைபொன்றை வரையும் நடவடிக்கையில் அந்த ஆணையகம் ஈடுபட்டுள்ளது.
மேற்படி உலகின் முதலாவது சுற்றுச் சூழல் நட்புறவுடைய தகன முறைமையின் பிரகாரம் சடலங்கள் நைதரசன் திரவத்துடன் சேர்த்து –-192 பாகை செல்சியஸுக்கு உறைய வைக்கப்பட்ட நசுக்கி சிறு துணிக்கைகளாக்கப்படும். பின்னர் அந்த துணிக்கைகளிலான ஈரப்பதனை நீக்கும் வரை அவை உறை குளிரில் உலர்த்தப்படும். இதன்போது அந்த சடலத்திலுள்ள செயற்கை பற்கள் போன்ற செயற்கையாக பொருத்தப்பட்ட அனைத்து உலோக பாகங்களும் அரித்து வேறாக்கப்படும்.
தொடர்ந்து எஞ்சியிருக்கும் கோப்பி நிறத்தை கொண்ட சடலக் கூறுகள் உயிரியல் ரீதியில் பிரிந்தழியக்கூடிய குறுகிய வடிவான கொள்கலனில் வைத்து புதைக்கப்படும்.
இந்நிலையில் இந்த முறைமையின் எதிர்ப்பாளர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கான இறுதி சடங்கை சம்பிராதயபூர்மாக செய்வதற்கு தடை விதிக்கும் கொடூரமானதும் கேவலமானதுமான ஒரு முறையாக புதிய தகன முறைமை உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM