அனுராதபுரம் நகரில் உள்ள பிரதான தனியார் நிதி நிறுவனத்தில் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் மற்றும் திறப்பனை முக்கொலை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி மிக விரைவில் குறித்த பொலிஸ் அத்தியட்சகர் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் திகதி இந்த சம்பவங்கள் தொடர்பில் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையிலேயே, அதன் பின்னரான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக இந்த கைது இடம்பெறவுள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
கடந்த 2016 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த கொள்ளை இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்த 11.5 கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டிருந்தது. அதன் மதிப்பு 7 கோடி ரூபாவாகும். கொள்ளையர்கள் கொள்ளையின் பின்னர் நிறுவனத்தில் இருந்த சி.சி.ரி.வி.பதிவுகளையும் உடன் எடுத்துச் சென்றிருந்தனர். இது தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந் நிலையில் குறித்த கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக மேலும் சிலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த விசாரணைகளில், அந்த கொள்ளை இடம்பெற்ற போது அனுராதபுரம் பகுதியில் முக்கிய பொறுப்பில் இருந்த குறித்த பொலிஸ் அதிகாரி (அப்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர்) தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதனை விட, அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் முன்னாள் இராணுவ வீரரும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவருமான எஸ்.எப். பண்டா உள்ளிட்ட மூவரைக் கார் ஒன்றுக்குள் சுட்டுக்கொன்றிருந்த சம்பவம் தொடர்பிலும் இதன்போது குறித்த பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM