அரசாங்கத்தின் கடன் மட்டம் 9,387 பில்லியனால் அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்குள்ளும் வெளியிலுமான கடன் களை அதிகரிக்க ஏற்பாடு செய்யவும் பொதுக்கடனை முகாமை செய்யவும் செயற்படுகடன் முகாமைத்துவ சட்டமொன்று இயற்றப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் நிதித் தேவைகள் மற்றும் கடன்களை மீளச் செலுத்துவதற்கான கடப்பாடு என்பவற்றை சாத்தியமான குறைந்த செலவில் நடுத்தர மற்றும் நீண்ட கால தவணையில் அது தொடர்பான அபாயம் தொடர்பான கவனத்துடன் எட்டுவதை உறுதிப்படுத்துவதும் இதன் இலக்காகவுள் ளது.
இந்நிலையில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராகவுமுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கான தனது சுற்றறிக்கையில், கடன் பேண் தகைமையானது 2016 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானத்தில் 76 சதவீதமாக உள்ள நிலையில் அது தேசிய ரீதியில் கவலை தரும் ஒன்றாகவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அரசாங்கம் கடனை திருப்பிச்செலுத்துவதில் இதற்கு முன் ஒருபோதும் இல்லாத வகையில் தனக்குரிய கடப்பாட்டிலிருந்து வழுவாத போதும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய எந்தவொரு அபாய நிலையையும் தடுப்பதற்காக சரியான கடன் சீர்திருத்தமுறையொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
புதிய சட்டமானது புதிய தீர்மானமொன்றின் மூலம் குறிப்பிட்ட நிதியாண்டு காலப் பகுதியில் பணத்தை அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பாராளுமன்றத்துக்கு அனுமதியளிக்கிறது. ஆனால் அந்தப் பணத்தொகையானது அதற்கு முன்னரான நிதி வருடத்தின் இறுதியிலான மொத்த நிலுவையிலுள்ள கடனின் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக் கக் கூடாது.
இந்தக் கடனானது அரசாங்க பொது கடன்களுக்கான மீள் நிதியிடல் மற்றும் முற்பண நிதியிடல் நோக்கங்களுக்காக நாணய சட்ட விதி, உள்நாட்டு திறைசேரி சட்டமூல கட்டளைச்சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணைகள் கட்டளைச் சட்டம் என்பன உள்ளடங்கலான சம்பந்தப்பட்ட சட்டங்களிலுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாகவே அதிகரிக்கப்படும். இந்த சட்டமூலமானது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசாங்கமானது பிரேரிக்கப்பட்ட பொத்துஹர - ஹலகெதர மத்திய அதிவேகப்பாதை நிர்மாணிப்பதற்கான கடனுக்கு தகுதி பெறுவதற்காக ஜப்பானிய வங்கியொன்றுக்கு 14 பில்லியன் ரூபா காப்புறுதி தவணைக் கட்டணத்தைச் செலுத்தக் கோரப்பட்டுள்ளது எனவும் மேற்படி பாதை நிர்மாணத்திற்கான கடன் தொகை இலங்கையின் கடனை மீளச் செலுத்துவதற்கான இயலுமை குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் தீர்மானிக் கப்படவுள்ளதாகவும் அரசாங்க தரப்பு அதி காரிகள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM