தேர்தல் கடமைகளில் நேரடியாக ஈடுபடும் பொலிஸாருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு நாளை 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்தார்.
ஏனைய அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார். இம் முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 5 இலட்சத்து 60 ஆயிரத்து 536 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 6 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் கணிசமானவை முறையாக பூர்த்தி செய்யப்படாமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும் குருணாகல் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர்கள் தொகை 67 ஆயிரமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 48 ஆயிரம் பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM