தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தாம் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் அனுமதிக்க மறுத்ததற்காக, பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வரவழைத்து தன் முன் மண்டியிடச் செய்தார் என்று புகார் எழுந்தது.
முதலில் ஆர்.பவானி மறுத்தபோதிலும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலையீட்டையடுத்து, நடந்த உண்மைகளை அதிபர் வெட்டவெளிச்சமாக்கியிருந்தார். பயமுறுத்தலின் பேரிலேயே தாம் முதலில் பொய் கூறப் பணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, அதிபர் மீது பொலிஸில் புகாரளித்துள்ள முதலமைச்சர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும் உண்மையை மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதேவேளை, கல்வித் துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்றும் தனக்கு நேர்ந்த கதி மற்றொரு அதிபருக்கோ, ஆசிரியருக்கோ நேர்ந்துவிடக் கூடாது என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
அதிபர் என்ற முறையில் மட்டுமன்றி, ஒரு பெண்ணை அகௌரவப்படுத்திய முதலமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் அதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களினது கௌரவத்தையும் உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM