(ஆர்.யசி)
மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரதான கள்ளர்கள் இன்று மக்கள் மத்தியில் விசேட அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர். பயமறியாத பிரதமர் என்பது உண்மையெனில் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி துறக்க வேண்டும் என் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் மிஷன்களை ஆரம்பிக்க மட்டுமே முடியும். மாறாக அவரால் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்கிற்கு மிஷன் 2யை ஆரம்பித்துள்ளாராம். கட்டம் கட்டமாக மிஷன்களை ஆரம்பித்து எந்தப்பயனும் இல்லை. கள்ளர் யாரென்று தெரிந்துள்ளது என்றால் அவர்களின் ஊழல் மோசடிகள் அகப்பட்டுள்ளது என்றால் உடனடியாக குற்றப்புலனாய்வு துறைக்கு அறிவிக்க வேண்டும். அதேபோல் நீதிமன்றத்தின் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பது வேடிக்கையான விடயமாகும். இவர்கள் அனைவரும் தமது அரசியல் நாடகத்தை நிறுத்த வேண்டும். மக்களை ஏமாற்றி தமது ஆட்சியினை தக்கவைக்கும் நகர்வுகளே இவர்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ஒருபோதும் குற்றவாளிகளை காப்பற்றப்போவதில்லை. ஜனாதிபதியின் செயற்பாடுகளும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்திலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்கால அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM