மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மன்னார் - வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதான சென்ஜோண் குணசீலன் குருஸ் என தெரிய வந்துள்ளது.
குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை படகு ஒன்றில் மீன் பிடிக்க தனியாக கடலுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த மீனவர் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. இந் நிலையில் சக மீனவர்கள் கடலில் சென்று தேடிய போது படகு மாத்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரு தினங்கள் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இணைந்து தேடிய போதும் குறித்த மீனவர் கண்டு பிடிக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை கடலில் மிதந்த நிலையில் மீனவரின் சடலம் சக மீனவர்களினால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.
சடலத்தை பொறுப்பேற்ற வங்காலை பொலிஸார் மன்னார் வைத்திய சலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM