பிரான்ஸின் முதல் பெண்மணி பிறிஜிட் மக்ரோன், தான் ஆசிரியையாக கடமையாற்றிய போது இளவயதாகவிருந்த தனது மாணவரும் அந்நாட்டின் எதிர்கால ஜனாதிபதியுமான இம்மானுவேல் மக்ரோனிடம் காதல் வசப்பட்டமை குறித்து அவரது குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததாக அவர் தொடர்பான புதிய சுயசரிதை நூலொன்று தெரிவிக்கிறது.
மெல்லே பிறன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட 'பிறிஜிட் மக்ரோன்: லாபிரான்சி' ( பிறிஜிட் மக்ரோன்: தடையற்ற பெண்) என்ற தலைப்பிலான புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமியன்ஸ் பிராந்தியத்தில் கேக் வர்த்தகத்தில் பிரபலம் பெற்ற செல்வந்தக் குடும்பத்தில் மருத்துவர்களாக கடமையாற்றிய தாய்க்கும் தந்தைக்கும் பிறந்து வளர்ந்து புனித ஆசிரிய பணியில் இணைந்து வங்கியாளர் ஒருவரை திருமணம் செய்து கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்த பிறிஜிட், தனது 38 ஆவது வயதில் லா புரோவிடன்ஸ் லைசி தனியார் கத்தோலிக்க பாடசாலையில் 14 வயது மாணவரான மக்ரோனை என்று சந்தித்தாரோ அன்று முதல் தன்னால் அதுவரை கட்டிக் காக்கப்பட்டு வந்த கௌரவம், மரியாதையை இழக்க ஆரம்பித்திருந்ததாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறிஜிட்டிற்கும் மக்ரோனுக்குமிடையிலான காதல் தொடர்பை அறிந்த அயலவர்கள் அவரது வீட்டு வாசலில் எச்சிலை துப்பி அவரை அவமதித்துள்ளனர்.
அத்துடன் பிறிஜிட்டின் பெற்றோர் கொள்ளை நோய் தொற்றுக்குள்ளானவர்களை ஒதுக்கி வைப்பது போன்று சமூகத்தால் நடத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவரது பெற்றோர் அவரது காதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
அச்சமயத்தில் பிறிஜிட்டின் நண்பர்களும் அவரை தீண்டத்தகாத ஒருவராகக் கருதி விலகிச் செல்ல ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் அக்காலப் பகுதியை தன்னை மிகவும் காயப்படுத்திய காலப் பகுதியாக பிறிஜிட் தனது நண்பியொருவரிடம் குறிப்பிட்டிருந்ததாக மேற்படி சுயசரிதை நூல் தெரிவிக்கிறது.
பின்னர் பிறிஜிட், மக்ரோனை சட்டபூர்வமாக திருமணம் செய்து அவரை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி அவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM