'கபில போம்­பவின்'மனைவி 'ஹப­ரண ரஞ்­சிக்கு' வலைவீச்சு

Published By: Robert

19 Jan, 2018 | 10:39 AM
image

திரு­கோ­ண­ம­லையில், காலஞ்­சென்ற பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் மகன் மர்ம நபர்­களால் கடத்­தப்­பட்டு 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில், போம்ப கபி­லவின் மனைவி இனோ­காவும், ஹப­ரண ரஞ்­ஜியின் குழு­வி­ன­ருக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். 

இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்தி கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, திரு­மலை பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ஆர்.எம்.ஜி.ஓ. பெரேரா ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்  ஏ.பி.ஜே. சந்­ர­கு­மா­ரவின் வழிநடத்­தலில் திரு­மலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இந்தக் கடத்தல், கப்பம் பெற்ற சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் பெண் ஒருவர் உள்­ளிட்ட மூவரின் படங்கள் அடங்­கிய சி.சி.ரி.வி. காணொ­ளி­களும் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில் அவர்­களைக் கைது செய்ய உத­வு­மாறு பொலிஸார் பொது மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் திரு­மலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு 0718591174, 0262222227 எனும் தொலை­பேசி இலக்­கத்­துக்கோ அல்­லது 026 2222222 எனும் பொலிஸ் நிலைய தொலை­பேசி இலக்­கத்­துக்கோ தகவல் தரு­மாறு பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

திரு­மலை, நான்காம் மைல்கல் பகு­தியைச் சேர்ந்த  23 வய­தான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை  தனது காத­லியைச் சந்­தித்­து­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போதே கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்தார். குறித்த இளை­ஞரின் தந்தை, திரு­ம­லையில் பிர­பல வர்த்­த­க­ராவார். சில வரு­டங்­க­ளுக்கு முன் அவர் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார். இளை­ஞரின் தாய்க்கு கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலை­பேசி அழைப்பில், இளை­ஞரின் தந்தை பற்­றிய சில விப­ரங்­களைக் கேட்டுத் தெரிந்­து­கொள்­வ­தற்­கா­கவே இளை­ஞரைக் கடத்­தி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடத்தல் விவ­காரம் குறித்து பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்கக்கூடாது என்றும் தொலை­பேசி அழைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் இளை­ஞரின் தாய் திரு­கோ­ண­மலை பொலிஸில் தமது மகன் கடத்­தப்­பட்­டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்­ப­டை­யி­லேயே பொலிஸார் தேடுதல் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தனர். 

கடத்­தப்­பட்ட இளைஞன், கடந்த 8 ஆம் திகதி மாலை  கம்­பஹா, யக்­கல - மிரிஸ்­வத்தை பகு­தியில் வைத்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவர் இவ்­வாறு மீட்­கப்பட்­டுள்­ள­தா­கவும், கடத்தல் முறைப்­பாடு தொடர்பில் திரு­மலை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதால் அவரை திரு­கோ­ண­ம­லைக்கு  அழைத்துச் சென்று ஒப்­ப­டைத்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இதுதொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை திரு­மலை பொலிஸார் முன்­னெ­டுத்த நிலையில், குறித்த இளைஞன் 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்­டதன் பின்­ன­ரேயே விடு­விக்­கப்பட்­டுள்­ள­மையை கண்­ட­றிந்­துள்­ளனர். இது தொடர்பில் குறித்த இளைஞன் சரி­யான வாக்கு மூலங்­களை பொலி­ஸா­ருக்கு வழங்­காத நிலையில் கப்பம் பெற்­றவர்களைக் கண்­ட­றிய பொலி ஸார் தீவிர விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். திரு­மலை ஐஸ் மஞ்சு எனும் பாதாள உலக தலை­வ­னினால் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் மற்­றொரு பாதாள உலக தலை­வ­னான கபில போம்ப என்­ப­வரின் மனை­வி­யான இனோக்­காவும், ஹப­ரன ரஞ்சி எனும் பாதாள உலக தலை­வனும் இணைந்து இக்­க­டத்­தலை முன்னெடுத்திருக்கலாம் எனவும் அதற்கான சில ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கிழக்கு பிராந்திய பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 

இந் நிலையிலேயே அது தொடர்பில் தீவிர அவதானம்  செலுத்தப்பட்டு கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20