இரகசியத் தகவலில் சிக்கிய இந்திய மீனவர்கள்

Published By: Devika

18 Jan, 2018 | 05:10 PM
image

கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இந்திய நாட்டுப் படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த மூன்று மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தப்படுவதாக கடற்படைக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கிணங்க, மன்னாருக்கு தென்கிழக்கே தேடுதலை மேற்கொண்ட கடற்படையினர், அப்பகுதியில் தரித்திருந்த இந்திய நாட்டுப் படகொன்றை சோதனையிட்டனர்.

படகில் பயணித்த மூன்று மீனவர்களில் ஒருவர், சுமார் அரை கிலோ எடையுள்ள ஹெரோயினைத் தனது உடலில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மீனவர்கள் மூவரையும் கைது செய்த கடற்படையினர், குறித்த படகையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் மூவரும் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் நடுக்கடலில் வைத்து போதை மருந்தை இலங்கையர் ஒருவருக்குக் கைமாற்ற இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19