நைஜீரியாவில் இரட்டைக் குண்டுத் தாக்குதல் : 12 பேர் பலி!!!

Published By: Digital Desk 7

18 Jan, 2018 | 03:56 PM
image

வடகிழக்கு - நைஜீரிய நகரான மைடுகுரியில் நேற்று பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக போர்னாவிற்கான அரச அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மைடுகுரி புறநகர் பகுதியின் சந்தைப் பகுதியில் இரண்டு குண்டுகளை வெடிக்கச்செய்து மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் அமைந்துள்ள குறித்த பகுதியானது அடிக்கடி பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு தொடங்கிய மோதல்களின் மையமாக விளங்கும் வடகிழக்கு மாகாணமான போர்னாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிரடி தாக்குதலை நைஜீரிய இராணுவம் அண்மையில் ஆரம்பித்தது.

இதனையும் மீறி பொதுமக்களையும் இராணுவத்தையும் இலக்குவைத்து பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17