வடகிழக்கு - நைஜீரிய நகரான மைடுகுரியில் நேற்று பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக போர்னாவிற்கான அரச அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மைடுகுரி புறநகர் பகுதியின் சந்தைப் பகுதியில் இரண்டு குண்டுகளை வெடிக்கச்செய்து மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் அமைந்துள்ள குறித்த பகுதியானது அடிக்கடி பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
2009ஆம் ஆண்டு தொடங்கிய மோதல்களின் மையமாக விளங்கும் வடகிழக்கு மாகாணமான போர்னாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிரடி தாக்குதலை நைஜீரிய இராணுவம் அண்மையில் ஆரம்பித்தது.
இதனையும் மீறி பொதுமக்களையும் இராணுவத்தையும் இலக்குவைத்து பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM