எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அஞ்சல் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்காக அஞ்சல் திணைக்களம் பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM