கனடாவானது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்குவைத்து மேற் கொள் ளப்படும் தாக்குதல்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டுப் பிரத மர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
மேற்படி வான் தாக்குதல்களால் மட்டும் உள்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை பெற்றுத் தர முடியாது என அவர் திங்கட்கிழமை ஒட்டாவா பிராந்தியத்தில் ஆற்றிய உரையின் போது கூறினார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ஜஸ்டின், அந்தப் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 6 போர் விமானங்களை வாபஸ் பெறுவதற்கு உறுதியளித்துள்ளார்.
எனினும் கனடாவின் இரு கண்காணிப்பு விமானங்கள் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானங்களுக்கான மீள் எரிபொருளை வழங்கும் விமானம் அந்தப் பிராந்தியத்தில் செயற்படவுள்ளதுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் பிராந்திய படைகளுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் கனேடிய படைவீரர்களின் தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது.
"அந்தப் பிராந்தியத்திலான வான் தாக்குதல் நடவடிக்கைகள் குறுகிய கால இராணுவ மற்றும் பிராந்திய ஆதாயங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாகவுள்ளதை புரிந்து கொள்வது அவசியமாகவுள்ளது. ஆனால் உள்நாட்டு சமூகங்களின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை அவர்கள் சொந்தமாக அடைவதற்கு அது வழிவகை செய்யாது" என ஜஸ்டின் கூறினார்.
"ஆப்கானிஸ்தானிலான ஒரு தசாப்த சிரமமான போர் நடவடிக்கையிலிருந்து கனேடியர்கள் இந்தப் பாடத்தை முதன்முதலாக கற்றுக்கொண்டனர். அங்கு எமது படையினர் நிபுணத்துவம் பெற்ற இராணுவ பயிற்சியாளர்களாக உலகப் பிரபலம் பெற்றனர்" என்று கூறிய ஜஸ்டின், அதனால் கனேடிய ஆயுதப் படையினர் ஈராக்கிய படையினருக்கு பயிற்சியளிப்பதற்கு மேலும் இராணுவ வளங்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் கனேடிய பிரதமரின் அறிவிப்புக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் நேச நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், கனேடிய அரசாங்கம் அந்தப் போரிலிருந்து பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரான ரொனா அம்புரோஸ் தெரி வித்தார்.
"நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் புதிய அணுகுமுறை தொடர்பில் குறிப்பிட்டால், அது பின் னோக்கிச் செல்கிறது என்றே கூறவேண்டி யுள்ளது” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM