அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 34 தொகுதி அடங்கிய பிரதிகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மொழிபெயர்ப்புடன் அறிக்கையை பெற்றுக்கொடுக்க அரச மொழியாக்க திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை இன்று நண்பகல் சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் மேற்படி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரியால், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 25 பிரதிகளும், பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊழல் விவகாரம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பத்து மாதங்கள் சந்தேகத்துக்குரிய சகல தரப்பையும் விசாரணை செய்ததுடன் ஆணைக்குழு தயாரித்த அறிக்கையினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடையங்கள் குறித்து ஜனாதிபதி ஒரு சாராம்ச தகவலாக வெளியிட்டிருந்த நிலையில் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்கோரி எதிரணிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் இன்று குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM