மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை சற்று முன்னர் சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரியால், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 25 பிரதிகளும், பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற இணையத்தள மூடாக அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பை நானே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊழல் விவகாரம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பத்து மாதங்கள் சந்தேகத்துக்குரிய சகல தரப்பையும் விசாரணை செய்ததுடன் ஆணைக்குழு தயாரித்த அறிக்கையினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடையங்கள் குறித்து ஜனாதிபதி ஒரு சாராம்ச தகவலாக வெளியிட்டிருந்த நிலையில் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்கோரி எதிரணிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் இன்று குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM