பாடசாலை வளாகத்தை முழுமையாக சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பாடசாலையின் அதிபர்களையே சாரும். அத்துடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் அதிபர்களுடையதே. இதனை முறையாக செய்யாத அதிபர்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில நாட்களில் சில பாடசாலைகளில் டெங்கு நோயினை பரப்பும் நுளம்பின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொள்ளமுடிந்துள்ளது. இது தொடர்பாக நாம் கல்வி அமைச்சு என்ற ரீதியில் உடனடியாக கவனம் செலுத்தியுள்ளோம்.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின்படி அனைத்து பாடசாலைகளிலும் அதன் வளாகங்களை சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுடையதாகும். இது தொடர்பாக கல்வி அமைச்சு அதிபர்களுக்கு தௌிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒருசில பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தேசிய வேலைத்திட்டத்தையும் கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுத்துள்ளது.
தொடர்ந்தும் கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தல்களை விடுத்துவருகின்றது. அண்மையில் பாடசாலையின் புதிய ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொழுது அனைத்து பாடசாலைகளிலும் சுற்றுச் சூழலை சுத்தம் செய்யுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனவே அதிபர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்காக அவர்கள் தங்களுடைய பகுதியில் இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு சுற்றுச் சூழலை சுத்தம் செய் யாத பாடசாலை அதிபர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமானால் அவர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM