ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக சம்­பந்தன் தெரி­விப்பு.!

Published By: Robert

16 Jan, 2018 | 10:10 AM
image

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்தும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு கிடைக்­க­வில்லை, அடுத்த தைப்­பொங்­க­லுக்குள் எமக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வு­கி­டைக்க வேண்டும் என ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

தேசிய தைப்­பொங்கல் பண்­டிகை நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், 

தமி­ழர்­களை பொறுத்த வரையில் தைப்­பொங்கல் மிகவும் முக்­கிய நிகழ்­வாகும். தமிழர் அனை­வரும் புனி­த­மாக கொண்­டாட வேண்­டிய ஒரு நிகழ்வு. எமது மக்கள் பயிர்ச்­செய்­கையில்  ஈடு­பட்டு அறு­வ­டைக்­கான  காலத்தில் இயற்கை எமக்கு கொடுத்த ஒத்­து­ழைப்­புக்­காக இயற்­கைக்கும் சூரி­ய­னுக்கு நன்றி தெரி­விக்கும் நிகழ்­வாக கொண்­டாடி வரு­கின்­றனர். எமது மக்கள் ஆழ்ந்த கலா­சார பாரம்­ப­ரி­யத்­திற்கு உரித்­தா­னர்­வர்கள். தமது கலா­சா­ரத்தை பாரம்­ப­ரி­யத்தை முன்­னேற்றி இந்த நாட்டில் நீண்­ட­காலம் வாழ்ந்து வரு­கின்­றனர். ஆனால் எமது மக்கள் எமது நாட்டில் இன்றும் சம­மான ஒரு அந்­தஸ்தை பெற்று வாழக் கூடிய சூழல் உரு­வா­க­வில்ல. நான் இங்கு வர­முன்னர் லக் ஷ்மர் கதிர்­காமர் நிறு­வ­னத்தில் ஒரு நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தேன் . இந்­தி­யாவின் முக்­கிய அமைச்­சர்­களின் ஒரு­வ­ரான ரவிசங்கர் பிரசாத் வந்­தி­ருந்தார். அவர் சில முக்­கிய கார­ணி­களை சுட்­டிக்­காட்­டினார். அர­சியல் சாசன  ரீதி­யா­கவும் ஜன­நா­யக ரீதி­யா­கவும் இந்­தியா ஏற்­ப­டுத்­தி­யுள்ள வளர்ச்சி பற்றிக் கூறினார். இந்­தி­யாவும் இலங்­கையை போலவே சமாந்­தர காலங்­களில் சுதந்­திரம் பெற்­றது. ஆனால் கடந்த 70 ஆண்­டு­களில் அர­சியல் சாசன ரீதி­யாக ஜன­நா­யக ரீதி­யாக இந்­தியா பாரிய முன்­னேற்­றங்­களை கண்­டுள்­ளது. அந்த நாட்டில் வெவ்­வேறு மொழிகள், கலா­சாரம், சமய மக்கள் வாழ்ந்­து­ வந்­தாலும் அனை­வரும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சம அந்­தஸ்­துடன் சம பிர­ஜை­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். 

ஆனால் இலங்­கையில் அவ்­வா­றான ஒரு நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை. கல்வி, விஞ்­ஞான, பொரு­ளா­தார ரீதியில் நாம் முன்­னேற்றம் காணா­துள்ளோம். எமது முயற்­சி­களை மக்­களின் நன்­மைக்­காக பயன்­ப­டுத்­தாது மக்கள் மத்­தியில் வேற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் பயன்­ப­டுத்­து­வது பாரிய சிக்­க­லாக மாறி­யுள்­ளது. இந்த நிலைமை மாற வேண்டும். புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்­துள்­ளன. இந்த மூன்று ஆண்­டு­களில் சில கரு­மங்கள் நடந்­துள்­ளன. அதை நாங்கள் மறுக்­க­வில்லை. ஆனால் இவை ஒரு முடி­வுக்கு வர­வேண்டும். அர­சியல் சாசன ரீதி­யாக முடி­வுக்கு வர­வேண்டும். இந்த நாட்டில் மக்கள் சம பிர­ஜை­க­ளாக சம உரி­மை­க­ளுடன் வாழ­வேண்­டி­யது மிகவும்  அவசியமாகும். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த கருமங்களை முன்னெடுக்க விரும்புகின்றனர். அதனை நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு தைப்பொங்கல் விழாவின் போது நிலைமைகள் மாறியிருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01