நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை, அடுத்த தைப்பொங்கலுக்குள் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வுகிடைக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழர்களை பொறுத்த வரையில் தைப்பொங்கல் மிகவும் முக்கிய நிகழ்வாகும். தமிழர் அனைவரும் புனிதமாக கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. எமது மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அறுவடைக்கான காலத்தில் இயற்கை எமக்கு கொடுத்த ஒத்துழைப்புக்காக இயற்கைக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர். எமது மக்கள் ஆழ்ந்த கலாசார பாரம்பரியத்திற்கு உரித்தானர்வர்கள். தமது கலாசாரத்தை பாரம்பரியத்தை முன்னேற்றி இந்த நாட்டில் நீண்டகாலம் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எமது மக்கள் எமது நாட்டில் இன்றும் சமமான ஒரு அந்தஸ்தை பெற்று வாழக் கூடிய சூழல் உருவாகவில்ல. நான் இங்கு வரமுன்னர் லக் ஷ்மர் கதிர்காமர் நிறுவனத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன் . இந்தியாவின் முக்கிய அமைச்சர்களின் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் வந்திருந்தார். அவர் சில முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டினார். அரசியல் சாசன ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இந்தியா ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி பற்றிக் கூறினார். இந்தியாவும் இலங்கையை போலவே சமாந்தர காலங்களில் சுதந்திரம் பெற்றது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் அரசியல் சாசன ரீதியாக ஜனநாயக ரீதியாக இந்தியா பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது. அந்த நாட்டில் வெவ்வேறு மொழிகள், கலாசாரம், சமய மக்கள் வாழ்ந்து வந்தாலும் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு சம அந்தஸ்துடன் சம பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இன்னும் ஏற்படவில்லை. கல்வி, விஞ்ஞான, பொருளாதார ரீதியில் நாம் முன்னேற்றம் காணாதுள்ளோம். எமது முயற்சிகளை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தாது மக்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவது பாரிய சிக்கலாக மாறியுள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் சில கருமங்கள் நடந்துள்ளன. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இவை ஒரு முடிவுக்கு வரவேண்டும். அரசியல் சாசன ரீதியாக முடிவுக்கு வரவேண்டும். இந்த நாட்டில் மக்கள் சம பிரஜைகளாக சம உரிமைகளுடன் வாழவேண்டியது மிகவும் அவசியமாகும். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த கருமங்களை முன்னெடுக்க விரும்புகின்றனர். அதனை நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு தைப்பொங்கல் விழாவின் போது நிலைமைகள் மாறியிருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM